நிலப் பிரச்சனை காரணமாக ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி மூடல்!
நிலப் பிரச்னை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள ரஜினிகாந்த்க்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் ’ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி’ என்ற அறக்கட்டளை சார்பாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் ’தி ஆஷ்ரம்’ மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். 2010-11ஆம் ஆண்டுடன் பள்ளியின் அங்கீகாரம் முடிந்த பின்னர் புதுப்பிக்கப்படாததை கண்டித்து நிலத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் பள்ளிக் கட்டிடத்தின் வாடகை பாக்கி பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும், எனவே, கட்டிடத்தை காலி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆஷ்ரம் பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் வேளச்சேரி உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த்தின் ’ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி’ என்ற அறக்கட்டளை சார்பாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் ’தி ஆஷ்ரம்’ மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். 2010-11ஆம் ஆண்டுடன் பள்ளியின் அங்கீகாரம் முடிந்த பின்னர் புதுப்பிக்கப்படாததை கண்டித்து நிலத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் பள்ளிக் கட்டிடத்தின் வாடகை பாக்கி பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருப்பதாகவும், எனவே, கட்டிடத்தை காலி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆஷ்ரம் பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் வேளச்சேரி உள்ள தனியார் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Comments